திருச்சி இடைத்தேர்தல் அதிமுக குழு மீண்டும் மாற்றம்: ரபி பெர்னார்டுக்கும் இடம்
சென்னை: திருச்சி மேற்கு இடைத் தேர்தலுக்கான அதிமுக பணிக் குழுவை முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீண்டும் மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 13.10.2011 அன்று நடைபெற உள்ள திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் ஏற்கனவே 16 பேர்களைக் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தார்கள்.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்களாக கன்னியாகுமரி மாவட்ட செயலாளரும், வனத் துறை அமைச்சருமான கே.டி.பச்சைமால், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், எம்.எல்.ஏ., மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ.சரோஜா,
கரூர் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சர் ஏ.பாப்பாசுந்தரம், எம்.எல்.ஏ., அரியலூர் மாவட்ட செயலாளர் துரை மணிவேல், எம்.எல்.ஏ., கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் எஸ்.காமராஜ், எம்.எல்.ஏ., ப.குமார் எம்.பி., ஏ.வில்லியம் ரபி பெர்னார்ட் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அதிமுக வேட்பாளரின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் இந்தக் குழுவை 2வது முறையாக ஜெயலலிதா மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications