டெல்லியில் சமையல் எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!
டெல்லியில் சமையல் எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள வீடுகளுக்கு சிஎன்ஜி எரிவாயு குழாய் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், அங்கு ஓடும் ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் முழுக்க முழுக்க சிஎன்ஜி கேஸ் கொண்டு இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், சிஎன்ஜி கேஸ் சப்ளை குறைந்துவிட்டதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாகவும் டெல்லியில் சிஎன்ஜி கேஸ் விலை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தற்போது ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் எரிவாயு இனி ஒரு கிலோ ரூ.32 ஆக உயர்கிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக டெல்லி சிஎன்ஜி வினியோகஸ்தரான இந்திரபிரஸ்தா கேஸ் நிறுவனம்(ஐஜிஎல்)கூறியுள்ளது.
மேலும், டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, காஸியாபாத் ஆகிய நகரங்களிலும் சிஎன்ஜி விலையை ரூ.2.30 வரை உயர்த்தப்பட இருப்பதாக ஐஜிஎல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications