வேட்பு மனு தாக்கல் முடிந்த பிறகும் தேமுதிக- இ.கம்யூ இன்னும் பேச்சுவார்த்தை

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சு நடத்திப் பார்த்துவிட்டு வெறுப்பாகி வெளியேறிய நிலையிலும், கடைசி வரை அந்தக் கட்சியுடன் இடப் பங்கீட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் முயன்றது.
ஆனால், அதிமுக தங்களை நடத்திய விதத்தால் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும் கோபம் கொண்டதையடுத்தே, தனித்துப் போட்டி என்று முதலில் அறிவித்துவிட்டு பின்னர் தேமுதிகவுடன் கூட்டணிக்கு முன் வந்தார் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
இந் நிலையில் தேமுதிகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சுமூகமாகப் பேச்சு நடத்தி தனக்கு வேண்டிய இடங்களைப் பெற்றுக் கொண்டு பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டது.
ஆனால், வேட்பு மனுக்கள் தாக்கல் முடிந்தவிட்ட நிலையில் தேமுதிகவிடம் இன்னும் சமூகமான இடப் பங்கீட்டை தா.பாண்டியனால் எட்ட முடியவில்லை.
நடத்திவிட்டு,
நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையிலும் இந்த இரு கட்சியிடையே பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. பல மாநகராட்சி, நகராட்சி வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் தேமுதிகவினரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் யார் வாபஸ் பெறப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை குழுவில் உள்ள ஜி.பழனிச்சாமி கூறுகையில், மனுக்களை வாபஸ் பெற 3ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் அதற்குள் பேசி முடித்து சுமூக முடிவு காண்போம். கூட்டணி ஏற்பட இரு கட்சியினரும் சமரசம் செய்து வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கி வருகிறோம். பேச்சுவார்த்தை இன்றும் தொடர்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications