மதுரை மேயர் பதவி தேர்தல்: சொல்லாமல் கொள்ளாமல் 'ஓடிப் போன' பாமக!

இந்தப் பதவிக்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
அத் போல பாமக சார்பில் மதுரை மேயர் பதவிக்கு ரமேஷ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருந்தார்.
ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வரை ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம் மதுரை மேயர் போட்டியிலிருந்து பாமக சொல்லாமல் கொள்ளாமல் விலகியுள்ளது.
சிறையில் இருக்கும் பாரப்பட்டி சுரேசுக்காக மனைவி வேட்பு மனு தாக்கல்:
இந் நிலையில் சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், 17வது வார்டு கவுன்சிலராக திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் சுரேஷ்குமார் உள்ளார். இவர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார். தற்போது நிலஅபகரிப்பு வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் உள்ளார்.
இந் நிலையில் அவருக்கே திமுக மீண்டும் சீட் வழங்கியுள்ளது. இதையடுத்து சுரேஷ்குமார் சார்பில், அவரது மனைவி டாக்டர் ஷாலினி வேட்புமனு தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications