எம்.எல்.ஏ. குடியிருப்பு வளாக கிணற்றில் வாலிபர் பிணம் மீட்பு
சென்னை: சென்னை எம்.எல்.ஏ. குடியிருப்பில் உள்ள கிணற்றில் மீட்கப்பட்ட வாலிபரின் பிணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை அரசினர் தோட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் இருந்து குடியிருப்புவாசிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிணற்றை சோதனையிட்ட போது, வாலிபர் ஒருவரின் பிணம் கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்தது. பிணமாக மீட்கப்பட்ட வாலிபருக்கு 35 வயதுக்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது.
கறுப்பு நிறத்தில் பேன்ட் மற்றும் சட்டை அணிந்துள்ள அவர் கொலை செய்யப்பட்டு, இந்த கிணற்றில் வீசப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. குடியிருப்பில் போலீஸ் பாதுகாப்பு உள்ள நிலையில் அங்குள்ள கிணற்றில் வாலிபர் ஒருவரின் பிணம் மீட்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications