விளையாடிய போது டிவி பெட்டி தலையில் விழுந்து குழந்தை பலி
சென்னை: சென்னையில் வீட்டில் இருந்த டிவி பெட்டி, விளையாடிய குழந்தையின் தலை மீது விழுந்த குழந்தை படுகாயமடைந்து பலியானது.
சென்னை, பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள கிரே நகரில் வசிப்பவர் பாலகிருஷ்ணன். இவருக்கு 1 ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் கையில் அடிப்பட்ட பாலகிருஷ்ணன், வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷணனின் 3 வயது மகன் கிஷோர், வீட்டில் உள்ள டிவி வைத்திருந்த நாற்காலியை பிடித்து விளையாடினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நாற்காலியில் வைத்திருந்த டிவி கிஷோரின் மீது விழுந்தது. இதில் அவனது தலையில் பலத்த காயமடைந்தது. சத்தம் கேட்டு ஒடி வந்த பெற்றோர், கிஷோரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு நேற்றிரவு சிகிச்சை பலனின்றி, கிஷோர் உயிரிழந்தான்.












Click it and Unblock the Notifications