கரூர்: ராகு காலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் என். மணிராஜ்
கரூர்: உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் ராகு காலத்தில் தனது வேட்பு மனுவை தி.மு.க.வேட்பாளர் என்.மணிராஜ் தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாரும் செய்ய துணியாத வகையில் ஒரு துணிச்சலான செயலை செய்துள்ளார் தி.மு.க. வேட்பாளர் என்.மணிராஜ். இது குறித்து ருசிகரமான தகவல்கள் இதோ கரூரில் பிரபலமான வழக்கறிஞர் என். மணிராஜ். இவர் ஆரம்பம் முதலே தி.மு.க. மீதும் அதன் தலைவர் கருணாநிதி மீதும் மிகுந்த பற்று கொண்டவர்.
உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் நகராட்சி தி.மு.க. சார்பில் 16வது வார்டு வேட்பாளராக என். மணிராஜை கட்சி தலைமை அறிவித்து. கடந்த அக்டோபர் 11ம் தேதியன்று மகளாய அம்மாவாசை என்பதால் அன்று கரூர் நகராட்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
ஆனால், அன்று தனது மனுவை தாக்கல் செய்யாமல், இதற்கு அடுத்த நாள் பாட்டியம்மை என்று கூறப்படும் பிரதமை நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், அன்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யமாட்டாடர்கள் என்று தேர்தல் அலுவலர்களும், பத்திரிக்கையாளர்களும் அசால்டாக இருந்தனர்.
அப்போது. தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் பரமத்தி சண்முகம் மற்றும் தனது ஆதரவாளர்கள் சகிதம் கரூர் நகராட்சிக்கு ராகு காலத்தில் வந்து தேர்தல் அலுவரிடம் தனது வேட்பு மனுவை சிரித்த முகத்துடன் தாக்கல் செய்தார் மணிராஜ்.
இதுகுறித்து வழக்கறிஞர் என்.மணிராஜ் கூறியதாவது, நான் கடந்த 1986, 1991, 2001, 2006 ஆகிய வருடத்தில் எல்லாம் ராகு காலத்திலும், எமகண்டம் நேரத்திலும் தான் எனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். அந்த 4 ஆண்டுளிலும் கவுன்சிலராக வெற்றி பெற்றேன்.
எனக்கு என் மீதும், மக்கள் மீதும் தான் நம்பிக்கை உள்ளது. ஒரு மனிதனுக்கு தேவை தன்னம்பிக்கையே தவிர வேறு எதுவும் தேவையில்லை. நம்பிக்கை தான் மனிதனுக்கு தற்போது தேவை, என்றார்.
நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து பலர் தாக்கல் செய்யும் வேட்பு மனு எல்லாம் தள்ளுபடி ஆகும் போது, இவர் ராகு காலத்தில் வேட்பு தாக்கல் செய்துள்ள போதிலும், அந்த மனு சட்டப்படி தகுதி பெற்றுள்ளது. வித்தியாசமான மனிதர் மணிராஜ்.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications