கே.சி.பழனிசாமியை போலீஸ் காவலில் கோரிய மனு தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ கே.சி.பழனிசாமியை போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க
கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நம்பிக்கையான நபர்களில் ஒருவர் கே.சி.பழனிசாமி. இவர்
தற்போது அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். இவர், கடந்த
தி.மு.க. ஆட்சியில் 2006-2011 வரை கரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள
காவிரி ஆற்றில் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததாக புகார்
எழுந்தது.

இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை குவித்தார் என்று மாயனூர் போலீசார் அவர் மீது 147,
353, 506/2, 3/1, 4(1), 4/1-ஏ, 71(1) போன்ற 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து
கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கே.சி.பழனிசாமி உடன் அவரது
உதவியாளர் சுந்தரேசன், மேலாளர் கிரிராஜன், செந்தில் ராஜா மற்றும் சசிகுமார், குமார்,
ராஜா ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

இதையடுத்து, கே.சி.பழனிசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார்
குளித்தலை மாஜிஸ்திரேட் 2 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி
செய்யப்பட்டது. அதேபோல கே.சி.பழனிசாமியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கரூர்
மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை போலீசாரே வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், கே.சி.பழனிசாமியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதி
மன்ற மதுரை கிளையில் மாயனூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா மனு தாக்கல் செய்தார். மனுவை
விசாரித்த நீதிபதி மாலா, கே.சி.பழனிசாமியின் வயதை கருத்தில் கொண்டு அவரை போலீஸ்
காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+