பெல்லாரி எம்.எல்.ஏ. நகேந்திரா வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை
Subscribe to Oneindia Tamil
பெங்களுர்: பெல்லாரியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சுரங்க தொழில் தொடர்பாக, கர்நாடக பா.ஜ.க. எல்.எம்.ஏ. நகேந்திராவின் அலுவலகங்கள் மற்றும் வீட்டை சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெல்லாரியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சுரங்கங்கள் குறித்து ஆய்வு நடத்தி, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அது குறித்து விசாரணை நடத்து வருகிறது. இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள், பெல்லாரி எம்.எல்.ஏ. நகேந்திராவின் வீட்டையும், அவரது அலுவலகம் உட்பட 7 இடங்களில் சோதனை நடத்தினர்.
நகேந்திரா, தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். மேலும் பெல்லாரியில் உள்ள ஜின்டல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் நிறுவனத்திலும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.












Click it and Unblock the Notifications