சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் திடீர் தீ: 2 பேர் பலி, லட்சக் கணக்கில் பட்டாசுகள் நாசம்
விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது ஏழாயிரம் பண்ணை. அங்குள்ள ஒரு தனியார் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் தீபாவளிக்காக தயார் செய்யப்பட்ட பட்டாசுகளை தொழிலாளர்கள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
காலை 10. 30 மணிக்கு அந்த அறையில் திடீர் என்று தீ பிடித்தது. இதில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்தன. இதில் அந்த அறையில் இருந்த 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிர் இழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இறந்த 2 பேர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் லட்சக்கணக்கான பட்டாசுகள் நாசமாகின.












Click it and Unblock the Notifications