இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவானாக சாந்தி டிக்கா தேர்வு

மேற்கு வங்காளத்தில் ரயில்வேத் துறையில் பணி புரிபவர் சாந்தி டிக்கா(35). இரண்டு குழந்தைகளின் தாய். அவர் தற்போது 969 இந்திய ராணுவத்தின் ரயில்வே என்ஜினியர் ரெஜிமென்டில் ஜவானாக சேர்ந்துள்ளார்.
டிக்கா தான் இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜவான் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் தகுதி தேர்வில் ஆண்களைவிட அவர் சிறப்பாக செயலாற்றி தேர்வாகியுள்ளார்.
இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது,
ஆயுதப்படையில் சேர பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் 1. 3 மில்லியன் எண்ணிக்கை கொண்ட பாதுகாப்பு படையின் முதல் பெண் ஜவான் டிக்கா தான்.
உடல் தகுதித் தேர்வில் அவர் அருமையாக தேர்ச்சி பெற்றார். 1.5 கிமீ ஓட்டப்பந்தயத்தில் ஆண்களைவிட 5 விநாடிகள் முன்கூட்டியே இலக்கை அடைந்தார். அதே போன்று 50 மீ்ட்டர் தூரத்தை ஆண்களைவிட 12 விநாடிகள் முன்னதாக அடைந்தார். துப்பாக்கிச் சுடுதலிலும் அவர் வல்லவராக உள்ளார். சிறந்த டிரெய்னீயாக அவர் தேர்வாகியுள்ளார்.
இது குறித்து டிக்கா கூறுகையில், என் கணவர் இறந்த பிறகு அவர் வேலை பார்த்த ரயில்வேயில் எனக்கு கடந்த 2005-ம் ஆண்டு வேலை கொடுத்தார்கள். கடந்த ஆண்டு தான் ராணுவத்தின் ரயில்வே பிரிவைப் பற்றி கேள்விப்பட்டு அதில் சேர முன்வந்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications