ஈராக்கில் தீவிரவாதிகள்-ராணுவம் துப்பாக்கி சண்டை: 13 பேர் பலி
பாக்தாத்: ஈராக்கில் தற்கொலை படையினரிடம் சிக்கிய பிணைக் கைதிகளை விடுவிக்க சென்றபோது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
ஈராக் நாட்டின் அன்பார் மாகாணத்தில் உள்ள நாட்டின் மேற்கு பகுதியின் தலைமை போலீஸ் நிலையத்தை, தற்கொலைப் படையை சேர்ந்த 6 பேர் கைப்பற்றினர். அவர்களை தாக்காமல் இருக்க அப்பாவி மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர்.
பிணைக் கைதிகளை விடுவிக்க ஈராக் பாதுகாப்பு படையினர் களமிறங்கினர். அப்போது 2 தரப்பினருக்கும் கடும் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தற்கொலைப் படையில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, துப்பாக்கி சூட்டிற்கு பின், தற்கொலைப் படையினரிடம் இருந்த காவல் நிலையம் மீண்டும், போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். இதில் போலீஸ் அதிகாரி ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும், உட்படுவர். இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம், என்றனர்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications