முன்னாள் திமுக அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம், உறவினர் வீடுகளில் ரெய்டு!

முன்னாள் திமுக அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் என்று அதிரடி சோதனை நடத்தினர். கடலூர், சிதம்பரம் மற்றும் சென்னையில் உள்ள அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்கள் குவித்ததாக பன்னீர் செல்வம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு கடலூர் மாவட்டம் முட்டத்தில் உள்ள பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல சிதம்பரத்தில் உள்ள பன்னீர் செல்வத்தின் அக்காள் மங்கையர்க்கரசி வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் சிதம்பரம் நகராட்சியில் துணை தலைவராக இருக்கிறார். இவரது வீட்டுக்கு அருகில் உள்ள இன்னொரு சகோதரியான மணிமேகலை வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள பன்னீர் செல்வம் வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. காட்டுமன்னார்குடியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றும் சோதனைக்குள்ளானது. அதேபோல வடலூரில் உள்ள உறவினர் சிவக்குமார் வீடு, காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மயிலாடுதுறையில் உள்ள பன்னீர் செல்வத்தின் இன்னொரு சகோதரியான மஞ்சுளா வீடு, சித்தப்பா தெய்வசிகாமணி வீடு ஆகியவற்றிலும் ரெய்டு நடந்துள்ளது.
10 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனைகளில் போலீஸார் ஈடுபட்டனர்.
முன்னாள் திமுக அமைச்சர் தா. மோ. அன்பரசனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட சில நாட்களிலேயே பன்னீர் செல்வத்தின் வீட்டில் சோதன நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த திமுக ஆட்சியில் பன்னீர் செல்வம் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். கடலூரில் முக்கிய நிர்வாகி. கடந்த சட்டசபை தேர்தலில் கடலூரில் உள்ள குறிஞ்சிப்பாடியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனிடம் தோல்வி அடைந்தார்.
கடந்த மாதம் தான் நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் கல்வி அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார். முன்னாள் திமுக அமைச்சர்கள் வீரபாண்டி எஸ். ஆறுமுகம். கே. என். நேரு, என். கே. கே. பி. ராஜா ஆகியோரும் நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications