உலக குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாசிற்கு வெண்கலம் உறுதி
பாகூ: இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து அவருக்கு வென்றாலும், தோற்றாலும் வெண்கலப்பதக்கம் உறுதியாகி உள்ளது.
அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகூ நகரில் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் விகாஸ் கிருஷ்ணன், ஜெய் பகவான், தேவின்தேரோ சிங் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில் காலிறுதி வரை 4 பேரும் காலிறுதி வரை முன்னேறினர்.
இந்நிலையில், 69 கிலோ பிரிவில் கலந்து கொண்ட விகாஸ் கிருஷ்ணன், மால்டோவாவை சேர்ந்த வாசிலி பெலோயசை 9-8 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம் விகாஸ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். மற்ற 3 பேரும் தோல்வியை தழுவினார். அரையறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள விகாஸ் கிருஷ்ணனுக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகி உள்ள நிலையில், அரையறுதியில் உக்ரைனை சேர்ந்த தாராஸ்சை எதிர்கொள்ள உள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விரேந்தர் சிங் இந்திய தரப்பில் வெண்கலம் வென்றார். அதன்பின் முதல் விகாஸ் மூலம் இந்தியாவி்ற்கு வெண்கலப்பதக்கம் உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து விகாஸ் கூறியதாவது, இந்த தொடரில் தங்கம் வெல்வது மிகவும் சிரமம். எனினும் போட்டியில் தங்கத்தை குறி வைத்து எனது முழுதிறனையும் செலுத்துவேன். வெண்கலப்பதக்கம் உறுதியாகி உள்ளதால், கவனக் குறைவாக செயல்பட போவதில்லை. உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நாட்டிற்கு பதக்கம் வென்றதும், அரையறுதி வரை முன்னேறி இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.












Click it and Unblock the Notifications