ஜப்பான் அணுமின் நிலைய ஊழியர் பலி: கதிர்வீ்ச்சு காரணம் அல்ல
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜாப்பான் கதிர்வீ்ச்சு ஏற்பட்ட புக்கூஷிமா அணு மின் நிலையத்தில் ஊழியர் ஒருவர் இறந்தார்.
ஜப்பான் நாட்டின் புக்கூஷிமா அணுமின் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடும் அணுகதிர்வீச்சு ஏற்பட்டு பலர் பலியாகினர். இந்நிலையில் நேற்று, அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வந்த 50வயது ஊழியர் ஒருவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ஆனால் இவர் அணு கதிர்வீச்சு தாக்கி பலியாகிவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், அணுஉலை ஊழியர்கள் தொடர்ந்து பலியாகி வருவதும் உடல்நிலை பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகிவிட்டதாக ஜப்பானிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications