வாக்காளர்களுக்கு விநியோகிக்க மதுப்பாட்டிகளை பதுக்கியவர் கைது

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் தேர்தலின் போது, வாக்காளர்களை கவர வீட்டில் மதுப்பாட்டிகளை பதுக்கியவர், போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், வயலூர் சாலை பகுதியில் உள்ள வீடுகளில் மதுப்பாட்டிகளை பதுக்கி வைத்து விற்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வயலூர் சாலையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அம்மையப்ப நகரில் உள்ள ஒரு வீட்டின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து அந்த வீட்டை சோதனையிட்டனர். அதில் அங்கு 90 அட்டை பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,080 மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி(39) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தேர்தலின் போது, வாக்காளர்களை கவருவதற்காக, இப்போதே மதுபாட்டிகளை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்ததாக தெரிவித்தார். அதற்காக பயன்படுத்தப்பட்ட அவரது பைக் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+