தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார். அப்போது டெம்போ டிராவலர், தபேரா, லேன்சர், சபாரி, உள்ளிட்ட 4 வாகனங்களில் பின்தொடர திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இதையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மற்றும் தே.மு.தி.க.மாவட்ட செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் மீது திண்டுக்கல் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனி அணி கண்டு தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடுமையாக தாக்கி பேசி வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் தான் விஜயகாந்தை போலீசார் மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications