திருச்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 20ம் தேதிக்கு மாற்றம்
சென்னை: திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 17ம் தேதிக்குப் பதில் 20ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை 17ம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், திருச்சி இடைத் தேர்தல் முடிவு வாக்காளர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம், அவர்களது முடிவுகளை கலைக்கலாம் என்று பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தெரிவித்தன. எனவே திருச்சி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்தன.
இதுகுறித்து மத்திய தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதிக்குப் பதில் 20ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications