திருச்சி வந்தார் கருணாநிதி- இன்று மாலை பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்
திருச்சி: திமுக தலைவர் கருணாநிதி திருச்சி வந்து சேர்ந்தார். இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டப் பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீ்ண்டும் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அங்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இன்று திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்து பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
இன்று காலை இதற்காக மலைக்கோட்டை ரயில் மூலம் புறப்பட்டு திருச்சி வந்து சேர்ந்தார் கருணாநிதி. ரயில் நிலையத்தில் கருணாநிதிக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து பிரமாண்ட வரவேற்பளித்தனர்.
பின்னர் ஹோட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார் கருணாநிதி. அங்கு கட்சிப் பிரமுகர்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இன்று மாலை 6 மணிக்கு புத்தூர் நான்கு சாலை சந்திப்பில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகிறார்.
கே.என்.நேருவுக்கான இந்தக் கூட்டத்தில் திருச்சி மேயர் வேட்பாளர் விஜயா ஜெயராச் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான திமுக வேட்பாளர்களை ஆதரித்தும் கருணாநிதி வாக்கு சேகரிக்கிறார்.
பிரசாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு இன்று இரவே கருணாநிதி சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications