இந்தியாவின் முன்னணி விமான டெஸ்ட் பைலட் தூக்கு போட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil

எச்ஏஎல் உருவாக்கிய பல புதிய விமானங்களை இயக்கி சோதனையிடுவதில் முக்கிய பங்கு வகித்து வந்தவர் பல்தேவ் சிங். கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு ரக விமானங்களை சோதனை முறையில் இயக்கியுள்ள இவர் சமீபத்தில் எச்ஏஎல் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
பறப்பதில் அலாதி பிரியம் கொண்ட அவர் இந்த பதவி உயர்வால் வெறுத்துப் போய் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த புதிய பதவியின் காரணமாக, விமானங்களை சோதனையிடும் பணியில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று பெங்களூர் நந்தி ஹில்ஸ் பகுதியில் ஒரு மரத்தில் இவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சீக்கியரான இவர் தனது டர்பனிலேயே தூக்கு போட்டுக் கொண்டார்.
இவர் டெஸ்ட் பைலட்டாகும் முன் இந்திய விமானப் படையின் பணியாற்றியவர் ஆவார்.












Click it and Unblock the Notifications