பணிச்சுமை, குடும்பப் பிரச்சனை: மதுரையில் பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மதுரை: மதுரையில் வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ்காரர் ஒருவர் தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை, நரிமேட்டில் உள்ள பிரசாத் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மொக்கராஜ் மகள் மீனாட்சி (25). மதுரை ஆயுதப்படையில் பெண் போலீசாக இருந்தார். நேற்றிரவு மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி ஒன்றின் பணப் பெட்டகத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
நள்ளிரவு 1.15 மணியளவில் தனி அறைக்கு சென்ற அவர் தன் துப்பாக்கியை எடுத்து தாடையில் வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். குண்டு வெடித்ததில் மீனாட்சியின் முகம் சிதைந்தது.
துப்பாக்கி வெடிக்கும் சத்தம்கேட்டவுடன் அங்கிருந்த மற்ற போலீசார் தனி அறைக்கு ஓடி வந்து பார்த்தபோது மீனாட்சி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். உடனே இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் கமிஷன்ர் திருநாவுக்கரசு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் மீனாட்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மீனாட்சி தற்கொலை செய்து கொண்ட அறையில் அவர் தன் கையால் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
எனக்கு தீராத தலை வலியும், குடும்ப பிரச்சினைகளும், பணிசுமைகள் போன்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதற்கு வேறு எந்த காரணத்தையும் புகுத்த வேண்டாம்.
நான் எடுத்த முடிவு தப்புதான். கடவுள் கொடுத்த உயிரை எடுக்க எனக்கு உரிமை இல்லை. இறைவா! என்னை மன்னித்துவிடு. இந்த சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இந்த முடிவுக்கு வேறு யாரும் பொறுப்பு இல்லை என்று அதில் அவர் எழுதியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனாட்சி கடந்த ஒன்றேகால் மாதத்திற்கு முன்பு தான் கரூரில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications