தாய்லாந்துக்கு வேலைக்குப் போன கணவரை மீட்டுத் தரக் கோரி 2 மனைவிகள் புகார்
சத்தியமங்கலம் தாய்லாந்துக்கு வேலைக்குப் போன கணவர் அங்கு பல்வேறு இன்னலுக்குள்ளாகியுள்ளதாகவும், அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரி அவரது இரண்டு மனைவிகள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் உதயராணி. அதேபோல காங்கேயத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவர்கள் இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளனர்.
அதில் எங்களது கணவர் தாய்லாந்துக்கு வேலை பார்க்கப் போயுள்ளார். இவரை அங்கு அனுப்பியவர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சண்முகசங்கர் ஆவார். எங்களிடமிருந்து தலா ரூ. 3 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களது கணவரை தாய்லாந்துக்கு அவர் அனுப்பினர். ஆனால் அங்கு சொன்னபடி சம்பளம் தரவில்லை. வேறு பல தொல்லைகளையும் எங்களது கணவர் சந்தித்து வருகிறார்.
இதேபோல பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சங்கர் தாய்லாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்களும் சிரமப்படுவதாக தெரிகிறது. எனவே சண்முக சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எஙக்ளது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கணவரை மீட்கக் கோரி இரண்டு மனைவிகள் கொடுத்த புகாரால் சத்தியமங்கலத்தில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications