வாக்காளர்களுக்கு தருவதற்காக ரூ.40,000 பதுக்கி வைத்திருந்த அங்கன்வாடி பணியாளர் சஸ்பெண்ட்
மதுரை: மதுரை அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.40,000 பணத்தை பதுக்கி வைத்திருந்த அங்கன்வாடி பணியாளரை கலெக்டர் சகாயம் சஸ்பெண்ட் செய்தார்.
மதுரை மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டுக்காக பணம், பரிசுப் பொருட்கள், அண்டா-குண்டாக்கள், மதுபாட்டில்கள், வேட்டி-சேலைகளை கொடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் கலெக்டர் சகாயத்தின் உத்தரவின் பேரில் மல்லப்புரம் கிராம நிர்வாக அலுவலர் நாகசுந்தரம் மற்றும் கிராம அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சாணார்பட்டி அங்கன்வாடி பணியாளர் ரூபினியும் அவரது மகன் வினோத்தும் மல்லப்புரம் ஊராட்சி மன்ற ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பின்னியம்மாள் என்பவருக்காக வாக்காளர்களுக்கு பணம் தந்து வருவதும், மேலும் வினியோகிப்பதற்காக ரூ.40,000 பணத்தை பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக எம்.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக அங்கன்வாடி பணியாளர் ரூபினியை கலெக்டர் சகாயம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications