மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் வேட்பாளர் மரணம்-தேர்தல் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாநகராட்சியின் 15வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஜெயமணி உடல் நல பாதிப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அந்த வார்டில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியின் 15வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஜெயமணி. இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் மரணமடைந்தார். முக்கிய மாநிலக் கட்சியின் வேட்பாளர் மரணமடைந்து விட்டதால் இந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications