திருச்சி மேற்குத் தொகுதி வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் நடு விரலில் மை-அய்யர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு, உள்ளாட்சித் தேர்தலின்போது நடு விரலில் மை வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருச்சிராப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 13-10-2011 அன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மையிடப்பட்டது.
தற்பொழுது 17-10-2011 அன்று நடைபெறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தேர்தலின் வாக்குப்பதிவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி முழுமைக்கும் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலுக்கு அடுத்த விரலான நடுவிரவில் மையிடப்படும் என்று சோ. அய்யர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications