மக்கள் எந்த அளவுக்கு இந்த ஆட்சியை ஏற்கிறார்கள் என்பது உள்ளாட்சி தேர்தல் முடிவில் தெரியும்- கி.வீரமணி
சென்னை: அதிமுக ஆட்சியை மக்கள் எந்த அளவுக்கு ஏற்கிறார்கள் என்பதற்கு தீர்ப்பு வழங்கும் நாள் தான் உள்ளாட்சித் தேர்தல் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
சென்னையில் வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற ஒரு சூழல் விருப்பம் இருந்தால்கூட இந்த தேர்தலிலே எவ்விதமான வன்முறைக்கும் இடமில்லாமலும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு இடமில்லாமலும் நடப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலே ஆட்சி மாற்றத்திற்கு இது வழி வகுக்காவிட்டாலும் கூட, இரண்டு செய்திகளை இந்தத் தேர்தல் உணர்த்தும்.
ஒன்று எந்தக் கட்சிக்கு வாக்காளித்தாலும் ஆளுங் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சி பேதம் காட்டாது, ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பை மதித்து நடக்கும் என்ற உணர்வை ஆளுங் கட்சிக்கு அது ஏற்படுத்த வேண்டும்.
அதோடு கடந்த மூன்று, நான்கு மாதங்களாக நடைபெற்ற ஆட்சிக்கு மக்கள் இந்த ஆட்சியை எந்த அளவிற்கு ஏற்கிறார்கள் என்பதற்கும், அவர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கும், அவர்களுடைய மனமாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டிய ஒரு தீர்ப்பு நாள் ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications