அதிமுக 40வது ஆண்டு விழா- எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் ஜெ.
சென்னை: அதிமுகவின் 40வது ஆண்டு விழாவை தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வருகை தந்த கட்சிப் பொதுச் செயலாளரான முதல்வர் ஜெயலலிதா, கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.
அதிமுகவின் 40 -வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்திற்கு வருகை தந்தார் ஜெயலலிதா.
மாநகராட்சித் தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு அவர் வந்தார்.அவருக்கு அதிமுகவினர் தடபுடலாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கட்சித் தலைமைக் கழக வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்தார். பின்னர் அனைவருக்கும் அவர் இனிப்புகளை வழங்கினார். அதன் பிறகு ஆண்டு விழா மலரையும் அவர் வெளியிட்டார்.
அதிமுகவினருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர்தனது கையால் வழங்கினார்.
அ.தி.மு. க 40 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 3 - தேதி வரை பொதுக்கூட்டங்கள் கலைநிகழ்ச்சிகள் தமிழ்நாடு, அந்தமான், உட்பட தென் மாநிலங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications