போயிங் விமான என்ஜின் பாகங்களைக் காணவில்லை.. ஏர் இந்தியா புகார்!
India
oi-Akkhan
By Chakra
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான என்ஜின்கள் பராமரிப்பு மையத்தில் இருந்து என்ஜின் பாகங்கள் திருடப்பட்டுள்ளன.
சுமார் 3000 கிலோ எடை கொண்ட இந்த பாகங்களின் மதிப்பு ரூ. 10 லட்சமாகும். இதில் போயிங் விமான என்ஜின்களின் இறக்கைகளும் அடக்கம்.
ஏர் இந்தியாவின் பராமரிப்பு மைய கிட்டங்கியில் இருந்து இவை திருடப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திலேயே இந்த திருட்டு நடந்திருந்தாலும் அதை இப்போது தான் வெளியே சொல்லியுள்ளது ஏர் இந்தியா நிர்வாகம்.
ஏர் இந்தியா ஊழியர்களின் உதவி இல்லாமல் இந்த திருட்டு சாத்தியமில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.
கிணற்றைக் காணவில்லை என்று வடிவேலு புகார் தருவது மாதிரி விமானத்தையே காணவில்லை என்று ஏர் இந்தியா புகார் தந்தாலும் ஆச்சரியமில்லை.
Making a mockery of security at the Delhi airport, thieves have swiped 1,700 scrapped aircraft engine parts weighing about 3,000 kg and worth over Rs 10 lakh from the AI's engine overhaul complex. The theft of goods, mostly the engine parts and blades of Boeing aircraft, came to light in the second week of June when one of godowns was opened, a senior Air India official said. It took two-months for the airline officials to report the theft, and an FIR was filed in the last week of September.