For Quick Alerts
For Daily Alerts
Just In
சிதம்பரம் அருகே வாக்குச்சாவடி அலுவலர் மாரடைப்பால் மரணம்: மக்கள் அதிர்ச்சி
சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி அலுவலர் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்துச் செல்கின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ளது காட்டுமன்னார்கோவில்- சிறகேந்தநல்லூர் வாக்குச்சாவடி. அங்கும் இன்று காலை வாக்குப்பதிவு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி அலுவலர் சேவியர் சுந்தர்ராஜன் என்வருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதனால் வாக்களிக்க வந்த மக்களும், அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
Comments
English summary
Polling booth officer named Savier Sundarrajan has died of heart attack while engaged in election duty near a booth in Chidambaram. Voters and other election officials have got shocked.
Story first published: Wednesday, October 19, 2011, 10:03 [IST]