படுகொலையைக் கண்டித்து கமுதி அருகே ஒரு கிராமமே தேர்தல் புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
கமுதி: தங்களது கிராமத்தில் நடந்த படுகொலையைக் கண்டித்து அந்தக் கிராமத்தினர் மொத்தமாக தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இதனால் அங்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது எம்.பச்சோரி என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் செப்டம்பர் 8ம் தேதி பழனிக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலை அந்தக்கிராமத்தினர் புறக்கணிக்க முடிவு செய்து ஓட்டுப் போடப் போகவில்லை. இந்த கிராமத்தில் 2 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஒருவருமே ஓட்டுப் போட வராததால் வாக்குச் சாவடிகள் வெறிச்சோடிக் கிடந்தன.












Click it and Unblock the Notifications