ஒரே எண்ணிக்கையில் வாக்கு பெற்றால் குலுக்கல் முறையில் வேட்பாளர் தேர்வு
நெல்லை: ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாவட்ட ஊராட்சி வார்டு, வாட்டார ஊராட்சி வார்டு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும்போது உரிய விதி்முறைகளைப் பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
பெருமளவு வாக்குகளைப் பெற்றுள்ளவர்களில் இருவரோ அல்லது இருவருக்கும் மேற்பட்டவர்களோ சமமான வாக்குகளை பெறுகின்ற நிலை ஏற்படலாம். அவர்களில் ஒருவருக்கு ஒரு வாக்கினை கூடுதலாக சேர்ப்பதன் மூலம் அவருள் ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பாளர்களின் பெயர்களை ஒரே அளவிலான தனித்தனி துண்டு சீட்டுகளில் எழுதி குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து எந்த வேட்பாளர் பெயர் வருகிறதோ அவரே ஒரு கூடுதல் வாக்கினை பெற்றதாக கருத வேண்டும். அதன்படி அவரே தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications