தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்கும்வரை ஓயமாட்டேன்: கடாபி மகன் சபதம்
திரிபோலி: தன் தந்தையைக் கொனறவர்களை பழிவாங்காமல் விடப்போவதில்லை என்று லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
லிபிய முன்னாள் அதிபர் கடாபியை புரட்சிப் படையினர் அவரது சொந்த ஊரான சிர்டேவில் வைத்து கடந்த 20ம் தேதி சுட்டுக் கொன்றனர். அதே நாளில் கடாபியின் 6வது மகனான முத்தாசிமையும் புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றனர். இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்த கடாபியின் 2வது மகன் சைப் அல் இஸ்லாம் தற்போது திடீர் என்று டிவி சேனல் ஒன்றில் தோன்றி பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது,
நான் லிபியாவில் உயிருடன் தான் இருக்கிறேன். நாம் தொடர்ந்து போராடுவோம். என் தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்காமல் வாங்கும் வரை ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.
சைப் அல் இஸ்லாம் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தவர். சரளமாக ஆங்கிலம் பேசுவார். அவருக்கு மேற்கத்திய நாடுகளில் நிறைய நண்பர்கள் உண்டு. கடாபிக்குப் பிறகு சைப் தான் லிபியாவின் அதிபராவார் என்று மேற்கத்திய நாடுகள் எதிர்பார்த்தன.
ஆனால் லிபியாவில் புரட்சி வெடித்ததும் யாரும் எதிர்பாரா வண்ணம் சைப் அல் இஸ்லாம் போராட்டத்தில் குதித்தார். தன் சொந்த மண்ணில் போராடி உயிர் விடுவதையே பெருமையாக நினைப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து மேற்கத்திய நாடுகள் ஏமாற்றம் அடைந்தன.
சர்வதேச நீதிமன்றம் சைப் அல் இஸ்லாமை குற்றவாளியாக அறிவித்தது. இதையடுத்து அவர் லிபிய எல்லையில் எங்கோ தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் தான் தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications