கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே மூட வேண்டும்-வைகோ
சங்கரன்கோவில்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க கூடாது என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது. மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கு தேவைதான். அதற்காக எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன. அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டுமே தவிர மக்கள் உயிர்களுக்கு உலை வைக்கும் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கலிங்கப்பட்டியில் உள்ள இல்லத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அணு உலையை எதிர்த்து போராடி வரும் மக்களை தமிழக அரசு குழப்புகிறது. முதலில் அணு மின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும் என கூறிய தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தை குறித்த அச்சத்தை பொதுமக்களிடம் போக்க வேண்டும் என கூறி வருகிறது.
ஜப்பானில் நடந்த புகுஷிமா விபத்திற்கு பின்னர் அணு உலைகளை அனைத்தையும் மூட ஜப்பான் முடிவு செய்துள்ளது. இவ்வளவு பணம் செலவழித்து மின்சாரம் தயாரிப்பதற்காக அணு உலைகளை உருவாக்கினாலும் அதற்காக மக்களை பலி கொடுக்க முடியாது என ஜப்பான் கூறியுள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க கூடாது என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது. மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கு தேவைதான். அதற்காக எத்தனையோ மாற்று வழிகள் உள்ளன. அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டுமே தவிர மக்கள் உயிர்களுக்கு உலை வைக்கும் அணுமின் நிலையத்தை மூட வேண்டும்.
மதிமுக நிராகரிக்க முடியாத அரசியல் கட்சியாக உள்ளது. இதை பற்றி அனைத்து மக்களும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். ஊழலற்ற அரசியலை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்திற்கு இளைஞர்கள் மாறி வருகின்றனர்.
தமிழக மக்கள் மத்தியில் அரசியல் கருத்துகளை இணையதளம் மூலம் பரிமாறி கொள்ளும் நிகழ்வுகள் அதிகமாகி வருகின்றன. மதிமுக மீது மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications