For Daily Alerts
Just In
இந்திய எல்லைக்குள் படகில் நுழைந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது
ஜாம்நகர்: இந்திய கடல் எல்லைக்குள் படகில் நுழைந்த 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்தியா கடல் எல்லைக்குள் 6 பாகிஸ்தானியர்கள் அல்-ஹசன் என்ற படகில் நுழைந்தனர். அந்த 6 பேரையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் படகை பறிமுதல் செய்தனர்.
அந்த 6 பேரும் ஓஹா பகுதியில் உள்ள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பூஜ் என்ற பகுதியில் உள்ள கூட்டு விசாரணை மையத்திற்கு கொண்டு செல்லப்படுவர். அங்கு 6 பேரையும் பல மாநில உளவுத்துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.
இந்த தகவலை இந்திய கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments
English summary
A Pakistani boat with six crew members on board was captured on Wednesday by the Indian Coast Guard (ICG) off Jhakau coast here in Gujarat for straying into Indian waters.
Story first published: Thursday, October 27, 2011, 16:30 [IST]