ராசாவின் நண்பர் பாட்சா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை- சிபிஐ: மர்மம் நீடிக்கிறது!
டெல்லி: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியாகியுள்ளது.
கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சாதிக் பாட்சா (38) கடந்த மார்ச் 16ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
ராசாவின் மிக நெருங்கிய நண்பரும் தொழில்முறை கூட்டாளியுமான அவரிடம் 2ஜி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் மர்மமாக இறந்தார்.
அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால், அது கொலையாக இருக்கலாம் என்றரீதியில் புகார்கள் எழுந்ததால், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு அப்போதைய மாநில திமுக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள், டாக்டர்கள் குழுவினர் பாட்சாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்தனர். மேலும் மாநில அரசு மருத்துவமனையில் அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட சில உடல் பகுதிகளையும் சோதனையிட்டனர்.
அதில், பாட்சா கொல்லப்பட்டார் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.
மேலும் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் உள்ளது அவரது கையெழுத்துதான் என்பதும் உறுதியாகியுள்ளது. நிர்பந்தித்தின் காரணமாக அவர் அந்தக் கடிதத்தை எழுதவில்லை என்பதும் தடயவியல் நிபுணர்களின் சோதனையில் உறுதியாகியுள்ளது.
இதனால் சாதிக் பாட்சா கொல்லப்படவில்லை என்றே சிபிஐ கருதுகிறது. இது தொடர்பாக சிபிஐ விரைவில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.
சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்திலேயே இந்த வழக்கை சிபிஐ இனி நடத்தவுள்ளது. அதே நேரத்தில் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து மேலும் விரிவான விசாரணையை சிபிஐ ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications