வாசாத்தி பலாத்கார வழக்கில் 45 பேருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: வாசாத்தியில் பெண்களை கற்பழித்த வழக்கில் தண்டனை பெற்றவர்களில் 45 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், வாசாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த் துறையினர், வனத்துறையினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என்று தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பின்னர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற 198 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 45 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜாமீன் பெற்றவர்களில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேரும், தாசில்தார் ஒருவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications