பெருவில் நிலநடுக்கம்: 20 பேர் காயம்
லீமா: பெரு நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் காயமடைந்தனர். பொருட்சேதம் குறித்த விபரம் தெரியவில்லை.
பெரு நாட்டில் நேற்று மதியம் மதியம் 1.54 நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈகா நகரில் இருந்து தென்மேற்கு திசையில் 51 கி.மீ தூரத்திலும், 35 ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது. 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
30 நிமிடங்கள் தொடர்ந்து குலுங்கியதால், அந்நாட்டு தலைநகர் லீமா மற்றும் அதை சுற்றிலும் உள்ள நகரங்களில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பயந்து போன மக்கள் வீடுகளை விட்டு சாலைக்கு ஓடிவந்தனர். இதனால் பெசிகோ பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் லீமா, இகா தவிர கல்கோ, அரிகுபா, அயாகுகோ உள்ளிட்ட பல நகரங்களிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எலும்பு முறிவு ஏற்பட்ட 2 பேர் உட்பட 20 பேர் காயமைடைந்தனர்.
பெரு நாட்டில் கடந்த 2007ம் ஆண்டு ஈகா மாகாணத்தில் 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 600 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications