தமிழக சிறைக் கைதிகளுக்கு இனி 'டவுசர்' கிடையாது- 'பேண்ட்' கொடுக்கப்படும்

Subscribe to Oneindia Tamil

TN Govt Logo
சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இனிமேல் டவுசருக்குப் பதில் பேண்ட் தர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர், கடலூர் உள்பட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகளும், 3 மகளிர் சிறைச்சாலைகளும், 5 சிறப்பு துணை சிறைகளும், 9 மாவட்ட சிறைச் சாலைகளும், 94 துணைச் சிறைகளும், 2 திறந்தவெளி சிறைச்சாலைகளும் உள்ளன. இதுதவிர 12 சிறார் சீர்திருத்தப் பள்ளியும் உள்ளன.

இந்த சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 15,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களி்ல் 5000க்கும் மேற்பட்டோர் தண்டனை பெற்ற கைதிகள் ஆவர். சிறைச்சாலைகளில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு தற்போது வெள்ளை நிற சட்டை மற்றும் கால்சட்டை(டிரவுசர்) கொடுக்கப்படுகிறது. இதை மாற்றி கால் சட்டைக்குப் பதில் முழு நீள பேண்ட் கொடுக்கலாம் என்று அரசுக்கு சிறை நிர்வாகம் பரிந்துரை செய்திருந்தது.

இதைப் பரிசீலித்த தமிழக அரசு அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து இனிமேல் தண்டனை பெற்ற கைதிகளுக்கு கால் சட்டைக்குப் பதில் பேண்ட் தரப்படும்.

ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில், கைதிகளுக்கு கோழிக்கறி உள்ளிட்ட அசைவ உணவுகளை வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் கைதிகளுக்கு கால்சட்டை போய் முழு நீள பேண்ட் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+