பிரேம்ஜி சொல்வது பொய்! - காங்கிரஸ் மறுப்பு

நாட்டில் நிலையான, உறுதியான முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட தலைமை இல்லை என்று விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி இன்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியாக மறுப்பு வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், "பிரேம்ஜியின் குற்றச்சாட்டு அடிப்படையில்லாதது. பொய்யானது. தேசத்தின் நலனை பிரதானமாக வைத்தே அரசின் முடிவுகள் அமைகின்றன. பிரச்சினைகளைப் பொறுத்து உடனுக்குடன் முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சர்வதேச அளவிலாகட்டும் அல்லது உள்நாடு அளவிலாகட்டும் தேசிய நலன் கருதி அரசு முடிவுகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதாரக் கொள்கையை பாதிக்குமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
எந்தத் துறையில் முடிவுகள் எடுக்கவில்லை என்று பிரேம்ஜி இவ்வாறு குறிப்பிடுகிறார் என்பதை விளக்க வேண்டும்," என மணீஷ் திவாரி கூறினார்.












Click it and Unblock the Notifications