நாட்டில் முடிவெடுக்கும் தலைமை இல்லையே - பிரேம்ஜி நேரடி தாக்கு

தினசரி மாறி மாறி ஏதாவது ஒரு ஊழல் புகார் வெளியே வருவதால் இந்த நாட்டின் நிர்வாகத்தின் மீது உலக நாடுகளிடையே நம்பிக்கை தளர்ந்துவிடும்; அதன் பிறகு நம்முடைய அந்தஸ்து சர்வதேச அரங்கில் குறைந்துவிடும்.
இந்த நிலைமையை அனைவரும் மாற்ற வேண்டும். நாட்டின் நிர்வாகம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும், என்று வலியுறுத்தி சில தினங்களுக்கு முன் தொழிலதிபர்கள் அசீம் பிரேம்ஜி, கேசவ் மகேந்திரா, தீபக் பரேக் உள்ளிட்டோர் கூட்டாக பிரதமருக்கு கடிதம் எழுதினர்.
இதன் எதிரொலி்யாக நம்முடைய சொந்தக் கருத்து வேறுபாடுகள் காரணமாக பொருளாதார முன்னேற்றம் தடைபட்டுவிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்திருந்தார். இதனை தரித்து, மீண்டும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இரண்டாவது கடிதம் எழுதியுள்ளனர் இந்தத் தொழிலதிபர்கள்.
இந்த நிலையில்தான், நாட்டின் 'தலைமை' குறித்து கவலை தெரிவித்துள்ளார் அசீம் பிரேம்ஜி.
பெங்களூரில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்னை எது என்று கேட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்க்கமாக ஆலோசித்து, உடனடியாக, துணிச்சலாக முடிவெடுக்கும் தலைமை இல்லாததுதான்.
காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி ஒதுக்கீட்டில் ஊழல், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல், ராணுவத்துக்குக் கொள்முதல் செய்ததில் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல் என்று ஏதாவது ஒரு ஊழல் புகார் தினந்தோறும் அலையலையாக மக்களைத் தாக்கி வருகிறது.
அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து, ஏதாவது ஒரு காரணத்துக்காக எதிர்ப்புகள் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன.
எந்த விஷயத்திலும் தடைகள், தயக்கங்கள், தாமதங்கள் என்று நம்பிக்கையை இழக்க வைக்கும் சம்பவங்களே நடக்கின்றன. நாட்டின் தலைமையோ, இவையெல்லாம் தீரும் அல்லது தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையைத் தரும் வகையில் நிலைமை இல்லை.
இதுதான் இந்த நாட்டின் இப்போதைய மிக முக்கியப்பிரச்னை என்று நான் கருதுகிறேன். இதை எல்லோரும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
அரசியல் தலைமை வலுவாக இருந்தால்தான் நாட்டின் அனைத்துத் துறைகளும் நம்பிக்கையோடு செயல்பட முடியும். அது இப்போது இல்லை என்பதை வேதனையோடு சுட்டிக்காட்டும் நிலையில் இருக்கிறோம்," என்றார் பிரேம்ஜி.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications