சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வயது 150: 26ம் தேதி கொண்டாட்டங்கள் துவக்கம்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 150வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி முதல் துவங்குகிறது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
கடந்த 1862ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை உயர்நீதிமன்றம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையில் கடற்கரை ஓரமாக உள்ள உயர் நீதிமன்றம், தமிழகம் மற்றும் பாண்டிசேரி பகுதிகளைச் சேர்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த நீதிமன்றம் கட்டப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் வரவேற்பு குழு, ஆண்டு மலர் குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
150வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் வரும் 26ம் தேதி துவங்க உள்ளது. இந்த விழாவில் முக்கிய விருந்தினராக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பலரை அழைக்க உயர்நீதி மன்ற விழாக் குழு முடிவு செய்துள்ளது. விழா நடக்க உள்ள இடம் மற்றும் மற்ற ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications