வன்னியில் 16 பேர் கொண்ட இந்திய ராணுவக் குழு ஆய்வு

Subscribe to Oneindia Tamil

வன்னி: ஈழத் தமிழர்களின் தாயகமான வன்னிக்கு இந்திய ராணுவக் குழு ஒன்று சென்றுள்ளது. 16 பேர் கொண்ட அந்தக் குழு வன்னியில் உள்ள இலங்கைப் படையின் தலைமையகம் உள்ளிட்டவற்றைப் பார்வையிடவுள்ளது.

தமிழர்களை கிட்டத்தட்ட ஒன்றுமில்லாமல் அழித்து ஒழித்து விட்டது இலங்கைப் படை. எஞ்சியிருக்கும் தமிழர்களும் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து வருகின்றனர். முழுமையாக இன்னும் மறுகுடியேற்றம் செய்யப்படாமல் வன்னி இன்னும் வாடி வதங்கிப் போய்த்தான் உள்ளது.

இந்த நிலையில் வன்னிக்கு இந்திய ராணுவக் குழு சென்றுள்ளது. விமானப்படை கமோடர் நவல்கர் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவாக இவர்கள் சென்றுள்ளனர்.

6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர்கள், வன்னியிலுள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகம், ஆயுதப்படை அலுவலகம்,மறுசீரமைப்பு ஆணைய அலுவலகம்,தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை ராணுவத்தினர் பார்வையிட உள்ளனர்.

இலங்கை ராணுவத் தளபதி ஜெயசூரியாவையும் பார்த்துப் பேசவுள்ளனர். இரு தரப்பிலும் ராணுவ ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளனவாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+