இங்கிலாந்தில் 34 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து-7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

சோமர்செட், டான்டன் அருகே எம்5 மோட்டார்வே என்ற நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் தாறுமாறாக சிதறிக் கிடந்தன. பல வாகனங்களில் உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
வாகனங்கள் பல அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளது. விபத்தில் சிக்கிய வாகனங்களில் நான்கு லாரிகள் ஆகும்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகே உள்ள டான்டன் ரக்பி கிளப் பகுதியில் ஒரு விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. அப்போது பட்டாசு வெடித்து அதிலிருந்து கிளம்பிய தீப்பிழம்பு சாலையில் வந்து விழுந்தது. இதைப் பார்த்து வாகன ஓட்டிகள் தடுமாறி விட்டனர். இதனால்தான் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ள நேரிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications