ஈரோடு அருகே ஆம்னி பஸ் டேங்கர் லாரியுடன் மோதி பயங்கர விபத்து- 7 பேர் பலி

தமிழகத்தில் சமீப காலத்தில் ஆம்னி பஸ் ஒன்று கோர விபத்தில் சிக்குவது 2வது முறையாகும். கடந்த செப்டம்பர் மாதம்தான் காஞ்சிபுரம் அருகே நடந்த கோர விபத்தில் கேபிஎன் பஸ்சில் பயணம் செய்த 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை, பெங்களூரிலிருந்து கோவை நோக்கி எஸ்ஆர்எம் என்ற ஆம்னி பஸ் போய்க் கொண்டிருந்தது. சித்தோடு வந்தபோது எதிரே வந்த டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதி விட்டது. மோதிய வேகத்தி்ல டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. பஸ்சும் தீப்பிடித்துக் கொண்டது.
இந்தக் கோர விபத்தில் பஸ்சின் டிரைவர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே கருகிப் போய் விட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர். போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்ததனர். அதற்குள் பஸ் முழுமையாக எரிந்து போய் விட்டது.
காயமடைந்தவர்கள் ஈரோடு, கோவை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்துள்ளவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
விபத்தில் சிக்கிய பஸ் ஏசி பஸ் ஆகும். இதனால் பயணிகளால் உடனடியாக வெளியேற முடியாமல் போய் விட்டது. அதிகாலை என்பதால் பயணிகள் அனைவருமே தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் என்ன நடந்தது என்பதை சுதாரிக்கும் முன்பு எல்லாம் நடந்து விட்டது.












Click it and Unblock the Notifications