பெரும் சிக்கலை நோக்கி இந்திய வங்கிகள்-தரத்தை இறக்கியது 'மூடிஸ்'!
டெல்லி: அடுத்த 12 மாதங்களில் இந்திய வங்கிகளின் வர்த்தக நிலைமை மோசமாகும் என்று சர்வதேச பொருளாதார ரேட்டிங் அமைப்பான மூடிஸ் (Moody's) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து இன்று மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் வங்கிகளின் பங்கு விலைகள் சடாரென சரிந்தன.
அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இந்திய வங்கிகள் ''stable'' (ஸ்திரமான நிலை) என்ற நிலையிலிருந்து ''negative'' (எதிர்மறையான நிலை) என்ற நிலைமைக்குப் போகலாம் என மூடிஸ் எச்சரித்துள்ளது.
இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்திய வங்கிகளின் சொத்து நிலைமை, மூலதனமயமாக்கம் (capitalisation), லாப விகிதம் ஆகியவை குறைந்து வருகின்றன. மூலதனம் சரிந்து வருவதால், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இந்திய வங்கிகளுக்கு நிதித் தட்டுப்பாடு உருவாகலாம் என மூடிஸ் கூறியுள்ளது.
அதே நேரத்தில் இந்திய வங்கிகளுக்கு மிக வலுவான வாடிக்கையாளர்கள் இருப்பதாலும், அவர்களது முதலீடுகள் வலுவாக இருப்பதாலும், இந்திய வங்கிகளில் அரசின் முதலீடுகளும் அதிகமாக இருப்பதாலும் பிரச்சனைகளை வங்கிகள் சமாளித்துக் கொள்ள முடியும் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக 8.4 சதவீத வளர்ச்சியை இந்தியா அடைந்து வந்தாலும், அதிகரித்து வரும் பணவீக்கமும் சந்தையில் நிதித் தட்டுப்பாடும் பொருளாதார வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தி வருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதிலும் பிரச்சனை நிலவுகிறது. இந்த நிதிப் பிரச்சனைகள் காரணமாக இதனால் வங்கிகள் கடன் வழங்கும் விகிதம் குறையலாம். இதன் காரணமாக, வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்பாடும் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு பிரச்சனை நிறைந்ததாகவே இருக்கும் என்று மூடிஸ் கூறியுள்ளது.
மூடிசின் இந்த அறிவிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தையில், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் பங்குகள் இன்று வீழ்ச்சியைக் கண்டன.
மூடிசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாகவும், இந்திய வங்கிகள் மிகவும் பலத்துடனும் ஸ்திரமாகவும் இருப்பதாகவும் எச்டிஎப்சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் கூறியுள்ளார். இதே கருத்தையே பெரும்பாலான வங்கிகள் கூறியுள்ளன.
வங்கிகள் என்னதான் கூறினாலும், மூடிஸ் போன்ற சர்வதேச ரேட்டிங் அமைப்பு அறிவித்துள்ள இந்த தரம் இறக்கம் காரணமாக, இந்திய வங்கித்துறை பல சிக்கல்களை சந்திக்கும் என்றே தெரிகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications