பெரும் சிக்கலை நோக்கி இந்திய வங்கிகள்-தரத்தை இறக்கியது 'மூடிஸ்'!
டெல்லி: அடுத்த 12 மாதங்களில் இந்திய வங்கிகளின் வர்த்தக நிலைமை மோசமாகும் என்று சர்வதேச பொருளாதார ரேட்டிங் அமைப்பான மூடிஸ் (Moody's) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து இன்று மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் வங்கிகளின் பங்கு விலைகள் சடாரென சரிந்தன.
அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இந்திய வங்கிகள் ''stable'' (ஸ்திரமான நிலை) என்ற நிலையிலிருந்து ''negative'' (எதிர்மறையான நிலை) என்ற நிலைமைக்குப் போகலாம் என மூடிஸ் எச்சரித்துள்ளது.
இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்திய வங்கிகளின் சொத்து நிலைமை, மூலதனமயமாக்கம் (capitalisation), லாப விகிதம் ஆகியவை குறைந்து வருகின்றன. மூலதனம் சரிந்து வருவதால், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு இந்திய வங்கிகளுக்கு நிதித் தட்டுப்பாடு உருவாகலாம் என மூடிஸ் கூறியுள்ளது.
அதே நேரத்தில் இந்திய வங்கிகளுக்கு மிக வலுவான வாடிக்கையாளர்கள் இருப்பதாலும், அவர்களது முதலீடுகள் வலுவாக இருப்பதாலும், இந்திய வங்கிகளில் அரசின் முதலீடுகளும் அதிகமாக இருப்பதாலும் பிரச்சனைகளை வங்கிகள் சமாளித்துக் கொள்ள முடியும் என்றும் மூடிஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக 8.4 சதவீத வளர்ச்சியை இந்தியா அடைந்து வந்தாலும், அதிகரித்து வரும் பணவீக்கமும் சந்தையில் நிதித் தட்டுப்பாடும் பொருளாதார வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தி வருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதிலும் பிரச்சனை நிலவுகிறது. இந்த நிதிப் பிரச்சனைகள் காரணமாக இதனால் வங்கிகள் கடன் வழங்கும் விகிதம் குறையலாம். இதன் காரணமாக, வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்பாடும் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்கு பிரச்சனை நிறைந்ததாகவே இருக்கும் என்று மூடிஸ் கூறியுள்ளது.
மூடிசின் இந்த அறிவிப்பு காரணமாக இந்திய பங்குச் சந்தையில், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் பங்குகள் இன்று வீழ்ச்சியைக் கண்டன.
மூடிசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாகவும், இந்திய வங்கிகள் மிகவும் பலத்துடனும் ஸ்திரமாகவும் இருப்பதாகவும் எச்டிஎப்சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் கூறியுள்ளார். இதே கருத்தையே பெரும்பாலான வங்கிகள் கூறியுள்ளன.
வங்கிகள் என்னதான் கூறினாலும், மூடிஸ் போன்ற சர்வதேச ரேட்டிங் அமைப்பு அறிவித்துள்ள இந்த தரம் இறக்கம் காரணமாக, இந்திய வங்கித்துறை பல சிக்கல்களை சந்திக்கும் என்றே தெரிகிறது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications