சிதம்பரம், திருச்சி, காரைக்குடி பட்டமளிப்பு விழாக்களில் ரோசய்யா: பலத்த போலீஸ் பாதுகாப்பு
சிவகங்கை: சிதம்பரம், திருச்சி, காரைக்குடி பல்கலைக்கழகங்களில் நடக்கும் பட்டமளிப்பு விழாக்களில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்துகொள்கிறார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று(9ம் தேதி) காலை 11 மணிக்கு பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் தமிழக ஆளுநர் ரோசய்யா மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இதே போன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா நாளை(10ம் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. அந்த விழாவிலும் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
வரும் 11ம் தேதி சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 24 வது பட்டமளிப்பு விழா நடைபெறுகின்றது. அங்கு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
பல்கலைக்கழக விழாக்களில் பங்கேற்கும் ஆளுநருக்கு அதிக பட்ச பாதுகாப்பு வழங்க உத்தரவி்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications