பெட்ரோல் விலையைக் குறைக்கவோ, இனி உயர்த்தாமல் இருக்கவோ முடியாது: பிரதமர்
டெல்லி: கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையைக் குறைக்கவோ, இனி உயர்த்த மாட்டோம் என்று உறுதியளிக்கவோ, விலையை உயர்த்தும் முன்பு தோழமைக் கட்சிகளின் முதல்வர்களிடம் கலந்தாலோசிக்கவோ முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலையைக் குறைக்குமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை கடந்த 8ம் தேதி இரவு டெல்லியில் சந்தித்து வலியுறுத்தினர்.
இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தான் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளோம். தேவைப்பட்டால் இனியும் உயர்த்துவோம். இல்லையென்றால் மத்திய அரசு நிர்வாகம் மட்டுமின்றி மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில நிர்வாகங்களும் பாதிக்கப்படும் என்று பிரதமர் அவர்களிடம் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும் போதெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தும். அதனால் இது பற்றி எல்லாம் தோழமைக் கட்சி முதல்வர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications