For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு

Google Oneindia Tamil News

மதுரை: தன்னை காதலிக்குமாறு ஆட்டோ டிரைவர் ஒருவர் கொடுத்த தொல்லையை தாங்க முடியாமல் +2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை அவனியாபுரத்தில் உள்ள சி.ஏ.எஸ். நகரைச் சேர்ந்தவர் உதயசூரியன். அவரது மகள் ஜெயவித்யா (17). தெற்கு வெளிவீதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்தார்.

அவனியாபுரத்தை அடுத்த மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). ஆட்டோ டிரைவர். பள்ளிக்கு தினமும் ஷேர்ஆட்டோவில் சென்று வந்த ஜெயவித்யாவை மணிகண்டன் (25) பின் தொடர்ந்து சென்றுள்ளார். தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். மணிகண்டனின் தொல்லையை பொறுக்க முடியாமல் ஜெயவித்யா இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஜெயவித்யாவுக்கு உறவு முறையி்ல் ஒருவருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதனால் ஆறுதலடைந்த ஜெயவித்யா தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு செல்ல ஜெயவித்யா வழக்கம் போல சி.ஏ.எஸ். நகரில் வந்து ஷேர்ஆட்டோவுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த மணிகண்டன், நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது, என்னை திருமணம் செய்து கொள் என்று கூறி மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார்.

இதில் மனமுடைந்து காணப்பட்ட ஜெயவித்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயவித்யாவை தற்கொலைக்கு தூண்டிய மணிகண்டன் மீது அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.

English summary
A +2 student Jayavidya (17) has hanged herself to death unable to bear the torture by an autodriver Manikandan(25). Manikandan used to follow her and compell her to love him. Jayavidhya who was not all interested in him finally ends her life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X