பொட்டு சுரேஷ் மீண்டும் கைது - நிருபரை தாக்கிய வழக்கில் சிக்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாரஇதழ் நிருபரை தாக்கிய வழக்கில் பொட்டு சுரேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மதுரை தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினரான பொட்டு சுரேஷ், மத்திய அமைச்சர் மு.க அழகிரிக்கு நெருக்கமானவர். அவர் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.
அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்த்து. இந்த நிலையில் பொட்டு சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொட்டுசுரேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாரப் பத்திரிக்கை நிருபர் ஒருவரை தாக்கிய வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உசிலம்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பொட்டு சுரேஷை போலீசார் கொண்டு செல்ல உள்ளனர்.












Click it and Unblock the Notifications