பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை சந்தித்தார் ராம்ஜெத்மலானி
வேலூர்: ராஜீ்வ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி, மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் சந்தித்து பேசினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றச்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பல போராட்டங்கள் நடந்தது.
இந்த நிலையில் 3 பேர் சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மாலனி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி, தூக்கு தண்டனையை நீதிமன்றம் தள்ளி வைத்தது. வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும், இன்று ராம்ஜெத் மாலனி, மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் சந்தித்து பேசினார்.
இது குறித்து ராம்ஜெத் மாலனி கூறியதாவது,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக வாதாடினேன். ஆனால் அந்த 3 பேரையும் இதுவரை பார்த்தது இல்லை. இதனையடுத்து இன்று 3 பேரையும் சந்தித்து பேசினேன். இந்த சந்திப்பின் போது, 3 பேரும் தாங்கள் இந்த வழக்கில் நிரபராதிகள் என்று கூறினர், என்றார்.












Click it and Unblock the Notifications